நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி !
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
Update: 2024-04-10 04:33 GMT
உபகரணங்கள்
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் உதயசங்கரி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கு பிளாஸ்டிக் பக்கெட், சோப்பு, துண்டு உட்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள் சங்கீதா, ராணி, வசந்தி, ஆனந்தி பங்கேற்றனர்.