வாங்கபாளையத்தில் நீரிழிவு நோயால் பாதித்த பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

வாங்கபாளையத்தில் நீரிழிவு நோயால் பாதித்த பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-06-01 07:19 GMT

காவல்துறை விசாரணை

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வாங்கபாளையம் அருகே உள்ள சுப்பு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி சொர்ண பிரியா வயது 44. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சொர்ண பிரியா, அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்தார். ஆயினும், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையவில்லை. இதனால் விரக்த்தி அடைந்த மன நிலையில் வாழ்ந்து வந்த சொர்ணப்பிரியா மே 29ஆம் தேதி மாலை 5:15 மணி அளவில், அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சதீஷ்குமார் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சொர்ண பிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Tags:    

Similar News