வெளிநாடுகளில் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி பயில உதவி தொகை

வெளிநாடுகளில் முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை தொடரும் பழங்குடியின மாணவ மாணவியர்ள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.;

Update: 2024-05-30 03:22 GMT

மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசின் அறிவிப்பின் படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி(PHD) மற்றும் முனைவர்  ஆராய்ச்சி உயர் படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் வகுப்பு மாணவ மாணவியர்ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் வகுப்பு மாணவ மாணவியர்கள் http://overseas.tribal.gov.in/ . விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:31.05.2024. ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News