திங்கள் நகர் அருகே விபத்து தொழிலாளி படுகாயம்
குருந்தன்கோடு சாலையில் விபத்தில் சிக்கியவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 09:58 GMT
விபத்தில் சிக்கியவர் படுகாயம்
குமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் 38). கூலித் தொழிலாளி. இவர் நேற்று பேயோடு - குருந்தன்கோடு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரல் கல்லறை தோட்டம் சாலையில் செல்லும்போது எதிரே வந்த வாகனம் ஒன்று பொன்ராஜ் மீது மோதியது. இதில் பொன்ராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் நாகர்கோவில் மணிகட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த அகில் மோல் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.