3 நாட்கள் போராட்டத்திற்கு பின் முதியவர் உடல் அடக்கம்

சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் மூன்று நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு முதியவர் உடல் அடக்கம் செய்தனர்.;

Update: 2024-02-07 09:30 GMT
3 நாட்கள் போராட்டத்திற்கு பின் முதியவர் உடல் அடக்கம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இறந்து விட்டார். இதில் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் மூன்று நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், இந்த நிலையில் போலீஸ் மற்றும் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News