பட்டாசு வெடித்ததில் தகராறு- வழக்கறிஞருக்கு மிரட்டல்.

Update: 2023-11-19 06:42 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாபி தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (32) .இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ராஜ் கண்ணன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மருதமுத்துவின் மகன் சந்தானகுமார் என்பவருக்கும் நவம்பர் 12ஆம் தேதி பட்டாசு வெடித்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வழக்கறிஞர் மணிகண்டன், ராஜ்கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த, சந்தானத்தின் தந்தை மருதமுத்து (48), மணிகண்டனின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி, கல்லைக் காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் லேசாக காயமடைந்த மணிகண்டன், இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வழக்கறிஞரை தாக்கி மிரட்டல் விடுத்த மருதமுத்து மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News