பாஜக நிர்வாகி மீது தாக்குதல்

ராசிபுரத்தில் பாஜக., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். .

Update: 2024-06-28 16:55 GMT

பாஜக

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக சஞ்சய் கம்ப்யூட்டர் என்ற பெயரில் வாடகைக்கு கடை நடத்தி வருபவர் ராமமூர்த்தி. புதுச்சத்திரம் ஒன்றிய பாஜக., செயலாளராக உள்ளார். இந்தக் கடையில் மின்சார லைன், பைப் லைன் உள்ளிட்ட கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. ராசிபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் ஒப்பந்ததாரராக உள்ளார். மேஸ்திரி மதன் என்பவர் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார். கட்டிட பணியை விரைந்து முடிக்காமல் கடந்த ஒரு வருடமாக காலம் தாழ்த்தியதால், வியாபரம் இடையூறாக இருப்பதாக கூறி காலம் தாழ்த்தாமல் பணியை முடித்து தருமாறு ஒப்பந்ததாரர் பாபுவிடம் ராமமூர்த்தி கூறியுள்ளார் .

இந்நிலையில் ராமமூர்த்தியின் கடைக்கு வந்த மதன் மற்றும் மதனின் தம்பியும், அதிமுக., ராசிபுரம் நகர துணைச் செயலாளராக உள்ள வாசு ஆகிய இருவரும் கடைக்கு வந்து ராமமூர்த்தியை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். அப்போது ராமமூர்த்தியின் கன்னத்தில் மேஸ்திரி மதன் இரண்டு முறை ஓங்கி அடித்தார். மேலும், 30 ஆயிரம் மதிப்பிலான , கம்யூட்டர், பிரிண்ட் அவுட் மிஷின், ஹார்ட் டிஸ்க், சேதப்படுத்தி, ராமமூர்த்திக்கு மதன் மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து ராமமூர்த்தி ராசிபுரம் காவல் நிலையத்தில் CCTV., காட்சிகளுடன் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் துறையினர் மதன், வாசு இருவர் மீது வழங்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாஜக நிர்வாகி ராமமூர்த்திக்கு ஆதரவாக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் சேதுராமன், வழக்கறிஞர் குமார், மற்றும் லோகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் அருள் ,தமிழரசு, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தனர்.

Tags:    

Similar News