சத்தியமங்கலத்தில் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா !

சத்தியமங்கலத்தில் 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-07-16 09:15 GMT

நீர் தேக்க தொட்டி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்  18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி திறந்தது வைத்தனர்.  ஜல் ஜீவன் மிஷன் சேமிப்பு நிதி 2020-2021 மாக்கிணாங்கோம்பை ஊராட்சி அரசூர் பகுதியில் அறுபதாயிரம் (60000)லிட்டர்  18,80,000 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள  மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அண்ணா நகர் பகுதியில் அறுபதாயிரம் (60000)லிட்டர்  18,80,000 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள   மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ திறந்து வைத்தார்.

இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள்  மாக்கிணாங்கோம்பை ஊராட்சி  அம்மு ஈஸ்வரன் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்  முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன்  முன்னாள் துணைத் தலைவர்ஏ எஸ் சண்முகசுந்தரம் மற்றும் அம்மு பூபதி ஏ எம் சாமிநாதன் கே எம் சாமிநாதன்அரவிந்த் வேலுச்சாமி சரவணன் ஏ ஆர் முருகேசன் மற்றும் ஒப்பந்ததாரர் பூபதி  மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News