தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நூலகம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி அய்வு செய்தார்.

Update: 2024-06-28 16:13 GMT

மேயர் ஆய்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நூலகம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி அய்வு செய்தார். பின்னர் மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியரின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்கும் வண்ணம் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் நூலகத்திற்கு என்று பிரத்தியேக இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

மேலும், பணிகள் நிறைவுற்ற புற காவல் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்" என்றார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி சபா பிரதிநிதி ஆர்தர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News