சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபரை கைது செய்யகோரி பெற்றோர் தர்ணா

Update: 2023-11-26 05:24 GMT

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் கிச்சிபாளையம் பகுதியில் பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவியை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சிறுமி வந்துள்ளதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.

பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே அறை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெற்றோர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்பாக காவல் நிலையம் முன் உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உறவினர்கள் ஆக்ரோஷமாக நியாயம் கேட்டு கதறினர். மேலும் சிறுமிக்கு மயக்க மாத்திரையை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வயிற்றுப் பகுதியில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோரிடம் சிறுமி கூறிக்கொண்டு அழுததாக உறவினர்கள் கூறியது பார்ப்பவர்களை வேதனை அடைய செய்தது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது தாயாரை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News