கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-24 03:32 GMT

மத்திய சிறை 

கோவை:கிணத்துக்கடவு சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்று போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கஞ்சாவை விற்பனைக்கு சவைத்திருந்த கல்லூரி மாணவர்கள் சர்வேஷ், விஷ்ணு,பிரசாத்,சுகுமார் ஆகிய நால்வரையும்  கைது செய்து அவர்களிடம் மூன்று கிலோ கஞ்சா,செல்போன், மோட்டார் சைக்கிள் கத்தி ஆகியவை பறிமுதல் செய்தனர்.மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News