பச்சை மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பச்சை மலை முருகன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-27 09:32 GMT

 முருகன், வள்ளி ,தெய்வானை 

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை மலை முருகன் கோவிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு காலை முதலே முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News