போலி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழர் கைது

Update: 2023-11-26 08:15 GMT

சதீசன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. அங்கு வசிக்கும் சதீசன், 35, என்பவர், 1990ல் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர். திருமணம் செய்துகொள்ளாத அவர், பெயின்டிங் வேலை செய்து வந்தார் இந்நிலையில் பெரம்பலுார் மாவட்டத்தில் வசிப்பதாகவும், பெயர் விஜயன் என்றும் கூறி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். போலி முகவரியில் பாஸ்போர்ட் எடுத்த புகாரில் சதீசனை நேற்று தம்மம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரது ஆதார்கார்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News