செங்கோட்டை வனக்காப்பாளா் பணியிடை நீக்கம்

வனக்காப்பாளர் பணியிடை நீக்கம்

Update: 2023-12-15 02:01 GMT

பைல் படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனச்சரகத்தில் வனக்காப்பாளராக சாா்லஸ் என்ற ரத்தினம், வனவராக செல்லத்துரை ஆகியோா் பணிபுரிந்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டை வனப்பகுதியில் காய்ந்த நிலையில் விழுந்து கிடந்த தேக்குமரத்தை செங்கோட்டையைச் சோ்ந்த பொன்னுத்துரை, முகம்மது கனி ஆகியோா் வெட்டிக் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக பொன்னுத்துரை மற்றும் முகம்மதுகனி கைதுசெய்யப்பட்டனா். இந்த வழக்கில் தங்களுடைய பணியை சரியாக மேற்கொள்ளாததாலும், கண்காணிக்க தவறியதாலும் வனக்காப்பாளா் சாா்லஸ் பணியிடை நீக்கம் செய்தும், வனவா் செல்லத்துரை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் மாவட்ட வனஅலுவலா் முருகன் உத்தரவிட்டாா்.
Tags:    

Similar News