இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுக்க முயன்றவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில், பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த, பெண்ணை ஆபாசமாக படம் எடுக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Update: 2023-11-22 09:33 GMT
தனசேகர் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அனந்தமங்கலத்தை சேர்ந்த தனுசு என்பவரின் மகன் தனசேகர்,23.அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண், தென்னங்கீற்று தட்டி கொண்டு அமைக்கப்பட்ட பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தனது வீட்டின் மாடியிலிருந்து, பக்கத்து வீட்டு பெண் குளித்துக் கொண்டிருந்ததை, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணும், அவரது கணவரும் ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஒரத்தி போலீசார், தனசேகரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News