தடுப்பு திட்ட முகாமை துவக்கி வைத்த யூனியன் சேர்மன்

ஆலங்குளத்தில் தடுப்பு திட்ட முகாமை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் துவக்கி வைத்தார்.

Update: 2024-07-02 06:09 GMT

ஆலங்குளத்தில் தடுப்பு திட்ட முகாமை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் துவக்கி வைத்தார்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெட்டூர் ஊராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையின் மூலமாக வழங்கப்படும் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமினை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சில் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News