கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
சிவகங்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்;
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:43 GMT
சிவகங்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவர் சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சமுதாயக்கூடம் அருகே அதேபகுதியை சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீஸ் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்