கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 07:19 GMT
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூ
ட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி தொகுப்பை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் வழங்கினார்.