நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்!

நிகழ்வுகள்

Update: 2024-07-15 14:00 GMT
புதுக்கோட்டையில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சேதமாகிய குடும்பத்தினரை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அண்ணாநகர் பகுதியில் முருகன், ஆரோக்கியசாமி ஆகியோரின் வீடுகள் நேற்று நள்ளிரவில் திடீரென தி பற்றி எரிந்தது இதில் இருவரது வீட்டிலும் மூன்று லட்சத்திற்கு மேலான பொருட்கள் எரிந்து சாம்பலானது இத்தகவலறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வருவாய் துறை அதிகாரிகளோடு சென்று பாதிக்கபட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார் அதன்பிறகு அரசு வழங்கப்படும் நிவாரண உதவி தொகையை தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் அப்போது அந்த பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என உறுதி அளித்து சென்றார்

Similar News