கொல்லிமலையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்" கீழ் ஆட்சியர் ஆய்வு.

உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், கொல்லிமலையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆய்வு

Update: 2024-08-21 16:36 GMT
மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர் உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கொல்லிமலை வட்டம், சித்தூர் நாடு ஊராட்சி, நரியங்காடு அங்கன்வாடி மையத்தில் வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். பவர்காடு லேம்ப் நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் மொத்த இருப்பு, உணவுப் பொருட்களின் தரம், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தார். சித்தூர்நாடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சித்தூர்நாடு சமுதாய கழிப்பிடத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். நரியங்காடு அரசு துணை சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளின் வருகை, வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். நரியங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வருகை தரும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் வருகை விபரம், பள்ளியில் அடிப்படை வசதிகள், இப்பள்ளியில் குழந்தைகள் இடைநின்றுள்ளார்களா என்றும் கேட்டறிந்து, குழந்தைகளின் கற்றல் திறன், சமையல் கூடம், உணவுப்பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தேனூர்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் விபரம், சுகாதார நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அருள்மிகு அரப்பளீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோவில் வளாகங்களை தூய்மையாக வைக்கவும், பொதுமக்கள் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கவும், சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் மலைப்பாதைகளில் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கொல்லிமலை வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

Similar News