அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்...

சங்ககிரி அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்....

Update: 2024-07-15 16:19 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளித்தலைமையாசிரியை வசந்தாள் தலமை வகித்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் 'கல்வி கண் திறந்த காமராஜர்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது கணித பட்டதாரி ஆசிரியர் இரா.முருகன் காமராஜர் வாழ்க்கை வரலாறுகள் குறித்து விளக்கி கூறினார். இதில் ஆசிரியர்கள் சித்ரா மகேஸ்வரி, சுசீலா,மழலையர் பள்ளி ஆசிரியர் ஜெயந்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவி பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.தனராஜ் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Similar News