வாலிபர் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது!

கைது செய்திகள்

Update: 2024-07-16 03:21 GMT
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடத்தெருவை சேர்ந் தவர் பிரகாஷ்(28). திலகர் திடல் உழவர் சந்தை பகுதியில் உள்ள மாட்டுத்தீவனம் கடையில் வேலைபார்த்து வந்த இவர் கடந்த 8ம் தேதி கடை முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் இடத்தகராறில் உற வினரே கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளியை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து 2 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரகாசை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் பிரதீப்பை (24) போலீசார் கடந்த 10ம் தேதி கைது செய்தனர். கோயில் இடத்தை ஆக்ரமிப்பு செய் ததை தட்டிக்கேட்டதால் பிரகாசை கொலை செய்ததாக பிரதீப் வாக்கு மூலத்தில் தெரிவித்தார். இதற்கிடையே பிரகாசை கொலை செய்துவிட்டு, பைக் கில் ஏறி தப்பிய பிரதீப்புக்கு உதவி செய்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சரவணபாண்டி (25), அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்(32) ஆகியோரை டவுன் போலீசார் கைது செய் தனர்.

Similar News