காதலியின் தற்கொலையால் காதலன் மனம் உடைந்து தற்கொலை!

துயரச் செய்திகள்

Update: 2024-07-21 06:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலியின் தற்கொலையை தொடர்ந்து, பூச்சிமருந்து குடித்த காதலன் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் புவனேஸ்வரி (23). இவருக்கும் நெம்மகோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அருள் வினோத் (28) என்பவருக்கும் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக பேசிக் கொள்ளாமல் இருந்ததாகவும், இந்த நிலையில் புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை மாலை வீட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அங்கு சென்று வந்த அருள் வினோத், வெள்ளிக்கிழமை இரவு தான் பணிபுரிந்து வரும் பள்ளியின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்தில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். வல்லத்திராக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News