ஐ.எஸ்.ஐஎஸ்அமைப்பு ஆதரவாளராக கூறப்படும் இக் இக்காமா சாதிக் கைது

மயிலாடுதுறையில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நீடூரை சேர்ந்த ஐ.எஸ்.ஐஎஸ்அமைப்பு ஆதரவாளராக கூறங இக்காமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட இருவரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-07-22 05:58 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவில் வசித்து வருபவர் ஹிதயத்துல்லா (76). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர்.  நான்கு பேரும் திருமணமாகி தனிதனியாக வசித்து வருகின்றனர். இவரது மூன்றாவது மகன் ரிஸ்வான் என்பவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ்பர்வீன் என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரிஸ்வான்- ரமீஸ் பர்வீன் இருவரும் அமெரிக்க நாட்டின்  வசித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அமெரிக்கா நாட்டின் முறைப்படி அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். ரமீஸ் பர்வீனுக்கு நஷ்ட ஈடாக இவர்கள் வசித்து வந்த அமெரிக்கா யூ.எஸ் டாலர் 50 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பில் 42 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 08.05.2024 அன்று அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் விவகாரத்து கொடுக்கப்பட்டது. முஸ்லிம் முறைப்படி நீடூரில் பத்வாவும் வாங்கிவிட்டனர். ரமேஷ்ரம்ஸ் பர்வீனுக்கு திருமணத்தின் போது செய்யப்பட்ட 40 பவுன் நகையை ரமீஸ் பர்வீனிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளராக கருதப்படும் இக்காமா சாதிக் பாட்ஷா என்பவர் இந்த விவாகரத்து தொடர்பாக ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூபாய் 2 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணம் கொடுக்க வில்லை என்றால் முட்டி போட வைத்து பணத்தை பெறுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து  செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஹிதயத்துல்லா அளித்த புகாரின்  பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இக்காமா சாதீக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஐயூப்கான் ஆகிய இருவரை கைது செய்து  தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த செம்பனார்கோவிலில் போலீசார் செம்பனார்கோவிலில் உள்ள தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இக்காமா சாதிக் மீது இருபதுக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தேசிய புலனாய்வு முகமையில் பிரிவிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

Similar News