அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2024-07-23 05:25 GMT
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக, “ தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்” என்னும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 50 மரக்கன்று நடும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் கணிதத்துறைத் தலைவருமான ரமேஷ்குமார் மரக்கன்று நடுதலின் அவசியம் குறித்து பேசினார். மாணவ, மாணவியர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். வணிக நிர்வாகவியல்துறைத் தலைவர் முனைவர் சரவணாதேவி, வணிகவியல் துறைத்தலைவர் இரகுபதி, ,தமிழ்த்துறைத்தலைவர் ஞானதீபன், வேதியியல் துறைத்தலைவர் கோவிந்தராஜூ, இயற்பியல் துறைத்தலைவர் அனுராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News