துண்டு பெருமாள் பாளையத்தில் கை முறிந்த முதியவர் வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை.

துண்டு பெருமாள் பாளையத்தில் கை முறிந்த முதியவர் வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-08-21 13:29 GMT
துண்டு பெருமாள் பாளையத்தில் கை முறிந்த முதியவர் வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை. கரூர், பூலாம்பாளையம் அருகே உள்ள துண்டு பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 66. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மது போதையில் இருந்த போது, கீழே விழுந்ததால் அவரது வலது கை எலும்பு விரிசல் ஏற்பட்டது. இதனால் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்ட அவர், விரக்தியில் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மகன் ராஜ்குமார் வயது 40 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராமசாமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News