மோட்டார் சைக்கிள் மோதிப்பின்படி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Update: 2024-09-22 08:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அந்தியூர் அருகே அத்தாணி - சத்தி ரோட்டில் கோழிக்கடை பகுதியில் நேற்று முன்தின பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் அவர் மீது எதிர்பாராதமாக மோதியது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் படுகாயம் அடைந்தார் இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் ஆனால் பலனின்றி அந்த பெண் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவருடைய மனைவி தமிழரசி வயது 60 என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் திண்டுக்கலில் இருந்து இங்கு வந்து சுற்றித்திரிந்தபோது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தும் தெரியவந்தது மேலும் விபத்து ஏற்படுத்தியதாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 34 என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News