நாமக்கல்: கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்!
நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், டவுன் பஞ்சாயத்து வாரியாக, மாணவர் அணியின் பொறுப்பிற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்பாளர்களுக்கான, நேர்காணல் நிகழ்ச்சியில் திரளான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,ராஜ்யசபா உறுப்பினர் K.R.N.ராஜேஷ்குமார், MP, மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, ஆகியோரின் ஆலோசனைப்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் உள்ள ஒன்றிய, நகர மற்றும் டவுன் பஞ்சாயத்து திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்பிற்கான நேர்காணல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் மோகன், துணை செயலாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல், ஆனந்த், தமிழ், அமுதரசன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. நாமக்கல் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் வரவேற்றார். நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இன்ஜினியர் அணி கிருபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைவாணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கவுதம், கடலரசன் கார்த்திக், சக்திவேல், மணிகண்டன், சங்கீதா ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், டவுன் பஞ்சாயத்து வாரியாக, மாணவர் அணியின் பொறுப்பிற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர் அணி பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.