மீனாட்சிப்பேட்டை: சுந்தரேஸ்வரர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு
மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரர் சன்னதியில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.