மீனாட்சிப்பேட்டையில் கன்னி அழைத்து வருதல் நிகழ்ச்சி
மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் கன்னி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் தோப்பு தெருவில் அமைந்துள்ள கன்னியம்மன் திருக்கோவிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு கன்னி அழைத்து வருதல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.