தேமுதிக தெற்கு மாவட்ட பொருளாளராக ராஜ்பரத் நியமனம்.
தேமுதிக நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளராக ராஜ்பரத் நியமனம் செய்து தலைமைக் கழகம் அறிவிப்பு அறிவிப்பு.;
பரமத்தி வேலூர், பிப். 21: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். நாமக்கல் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக இருந்து வந்த ராஜ்பரத் தற்போது நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளார். நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளராக நியமனம் செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளரை ராஜ்பரத் நேரில் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.