புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மங்கலாபட்டியைச் சேர்ந்த ரபேஷ் குமார் (24) என்பவ்வர் கல்லுப்பட்டி ஆற்றின் அருகே டிராக்டரில் மணல் கடத்துவதாக மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த மாத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 1/2 யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.