இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு முகாம்
இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு முகாம்;
இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு முகாம் மற்றும் சிந்தனைநாள் திரளணி முகாம் சாரணர், சாரணீயர்களுக்கு மாநில அளவில் மேதகு ஆளுனர் அவர்களால் வழங்கப்படும் உயரிய விருதான இராஜ்யபுரஸ்கார் விருதுத் தேர்வு முகாமில் பங்கேற்கவுள்ள சாரண சாரணீயர்களுக்கான விருதுத்தேர்வு முகாம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் முதல் 21.02.25 முதல் 23.02.25 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரணர், சாரணீயர்கள் 630 பேர் இம்முகாமில் கலந்து கொண்டனர். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் சாரண இயக்க மாவட்டத்துணைத்தலைவருமான திரு.ர.சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் முகாம் செயலர் து.விஜய் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருமதி.கற்பகம் (இடைநிலை) திரு.பச்சமுத்து (தொடக்கக்கல்வி) திரு.ஜோதி (தனியார் பள்ளிகள்) கல்வி நிறுவன இயக்குனர்கள் முனைவர்.மோகன், முனைவர்.செந்தில்குமார், முனைவர்.சத்யசேகர், முதல்வர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் திருமதி.ப.மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமினைத் துவக்கி வைத்தார்.முகாமினை தேசியத்தலைமையக பாடத்திட்டத்தின் படி திரு.பீட்டர் ஆரோக்கியசாமி, திரு.வெங்கடாசலம், திரு.நிக்கோலஸ், திரு.அந்தோணிசாமி, திரு.இரக்கோத்தமன், செல்வி.கஸ்தூரிபாய்,திருமதி.மலர்விழி, திருமதி.திலகவதி ஆகியோர் அடங்கிய குழு முகாமினைச் சிறப்பாக நடத்தியது. முகாமில் அணிமுறை, முதலுதவி, ஆக்கல் கலை, நிலப்படம், மதிப்பீடு உள்ளிட்ட பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. முகாமின் நிறைவு விழாவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர்.செல்வம், வித்யா விகாஸ் கல்விநிறுவனங்களின் தாளாளரும், மாவட்ட ஆணையருமான முனைவர்.டி.ஓ.சிங்காரவேல், பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச் செயலர் கஸ்தூரிபா காந்தி.சிதம்பரம், மாவட்ட ஆணையர்கள் முனைவர். தில்லைக்குமார், திரு.பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முகாம் செயல்பாடுகளைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். 22.02.25 அன்று திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற சிந்தனைநாள் திரளணி முகாம் போட்டிகளை மாவட்டத்தலைவர் முனைவர். குணசேகரன், ஆணையர் முனைவர் டி.ஒ.சிங்காரவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.திரளணியினை மாவட்ட துணைத்தலைவர் மற்றும் மகாதேவ வித்யாலயம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தி.ம.சிவசிதம்பரம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்விநிறுவன இயக்குனர்கள் முனைவர்.இராமலிங்கம், முனைவர்.முத்துசாமி, முனைவர்.கே.எஸ்.பழனியப்பன், முதல்வர்.பூர்ணபிரியா ஆகியோர் வெற்றிபெற்றமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். முகாம் செயலர் து.விஜய் தலைமையிலான குழு முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தது.