ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு ராகு காலப் பூஜை
தாடிக்கொம்பில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு ராகு காலப் பூஜை;

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு ராகு காலப் பூஜை நடைபெற்றது. சந்தனம், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். பூக்களால் சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.