கிணற்றில் மூழ்கிய நபர் பலி.
மதுரை உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழசெம்பட்டியை சேர்ந்த முத்து கண்ணனின் மகன் பாலமுருகன்( 55) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் ( மார்ச் .17) மதியம் அவரது கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி வளர்மதி சிந்து பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.