கிரிவலம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி.
செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்.;

நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் சென்றுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ தினத்தில் சாமி தரிசனம் மேற்கொண்ட நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார். 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவல பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், வாயு லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும், திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோயிலிலும் தரிசனம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி கிரிவலப் பாதையில் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர். இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட திரைப்பிரபலங்களை கண்ட பக்தர்கள் அவர்களுடன் செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.