
கீரனுார்: சீமானூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி புவனேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவவலி ஏற்படவே 108 ஆம்புலன்சில் அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேஷ், அவசரகால மருத்துவ உதவியாளர் மஞ்சுசூர்யா ஆகியோரை ஜெயராஜ். புவனேஸ்வரியின் உறவினர்கள் பாராட்டினர்