தக்கோலம் : வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி!
வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி;
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுதா 40. இவர் நேற்று மாலை தனது வீட்டில் லைட் போடுவதற்காக ஸ்விட்ச் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.