மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர், மே 20- மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் என நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தினர் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுத் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் எஸ்.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்து பேசினர். :