புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்தவர் சண்முகவள்ளி (87). இவர் தானியாளம்பட்டி கிளை சாலையில் நடந்து சென்ற போது அவருக்கு எதிரே பைக்கில் வந்த மாரியப்பன் (70) மோதியதில் சண்முகவள்ளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சண்முகவல்லியின் மகள் அளித்த புகாரில் விராலிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.