புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மங்கனம் பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (52). இவருக்கு திருமணம் ஆகி 33 வருடம் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென்று மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மகன் அளித்த புகாரில் கணேஷ் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.