புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த அமரடிக்கையை சேர்ந்தவர் காளிதாசன் (32). இவர் ஆவுடையார் கோவில் காசியார் மடம் அவரது வீட்டின் அருகில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார் கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 2.800kg குட்கா பொருளையும் ரூ.3100 -யும் பறிமுதல் செய்தனர்.