புதுக்கோட்டை, இலுப்பூர் அடுத்த புதூரை சேர்ந்தவர் முருகானந்தம் (39). இவர் புதூரில் உள்ள பெட்டி கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 540 கிராம் குட்கா பொருளையும் ரூ.241 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.