புதுக்கோட்டை, அறந்தாங்கியை சேர்ந்தவர் சேகர் (40). இவர் அறந்தாங்கியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது ரத்தின கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் (19) மோதியதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.