அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி. K.பழனிசாமி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக DMK ITWing மற்றும் அமைச்சர் TRB.ராஜா மீது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதில், எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புகார் அளித்தனர்.