கோடநாடு கொலை கொள்ளை வழக்கு

மனு மீது இறுதி வாதம் இம்மாதம் 26 ம் தேதிக்கு நடைபெறும் என்றும் அன்றை தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.;

Update: 2025-08-14 16:42 GMT
கோடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், சில முக்கிய சாட்சிகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கேட்டுக் கொண்டார் மேலும் சம்பவம் நடந்த கோடநாடு எஸ்டேட்டை நீதிமன்ற குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் நீதிமன்றத்தில் அளித்திருந்த மனு மீது இறுதி வாதம் இம்மாதம் 26 ம் தேதிக்கு நடைபெறும் என்றும் அன்றை தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News