அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்ததால் பரபரப்பு, ஓட்டுநர் யானையிடமிருந்து பேருந்தை சாதுரியமாக இயக்கிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது......;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்ததால் பரபரப்பு, ஓட்டுநர் யானையிடமிருந்து பேருந்தை சாதுரியமாக இயக்கிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது...... நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய இந்த ஒற்றை காட்டு யானை குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து தாக்கம் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் இன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கீழ்த்தட்ட பள்ளம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உலா வந்தும் அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி சென்ற அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் அருகே சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில் பின்னர் ஓட்டுநர் சாதுரியமாக யானையிடமிருந்து பேருந்தை இயக்கி சென்றார். இந்த பதபதைக்கும் காட்சிகளை பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை மிகுந்த ஆக்ரோசத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், தற்போது மீண்டும் இப்பகுதியில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.