அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை மாநாடுகள் - கொடியேற்றம், .

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை மாநாடுகள் - கொடியேற்றப்பட்டது., .;

Update: 2025-09-23 02:53 GMT
அரியலூர், செப்.25- அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பாளர்கள் என அரசால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதாக செய்திகள் பரலாக்கப்பட்டு மக்கள் பீதிக்கு உள்ளாக்கப்பட்டு மன உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். மேலும் வீட்டுவரி, தண்ணீர் வரி ரத்து செய்யப்பட்டு நூறு நாள் வேலையும் மறுக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் தாங்கள் விருப்பபட்டு இணைந்தனர் இதன்படி அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் மற்றும் ஆண்டிமடம் வட்டம் மருதூர் தஞ்சாவூரான் சாவடி, வாரியங்காவல் புதுக்குப்பம் மற்றும் செயங்கொண்டம் ஒன்றியம் கீழ குடியிருப்பு - மீன்சுருட்டி ஆகிய கிராமங்களில் கடந்த காலங்களில் நீர்நிலை புறம்போக்கு என தவறாக பதிவானதை மறு ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா கேட்டு போராட்டம் கடந்த மாதங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனடிப்படையில் செப்டம்பர் 21 ல் நாகமங்கலத்தில் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் 1 கிளை செயலாளர் கமலக்கண்ணன் பொருளளர் கவிதா மற்றும் மேகராஜன் தலைமையில் விவசாயசங்க கொடி ஏற்றப்பட்டது.அதே போல மருதூர் கிராமத்தில் கிளை தலைவர் நீலமேகம் கிளை செயலாளர் சங்கர், பொருளாளர் இளையராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அதே போல தஞ்சாவூரன் சாவடியில் கிளை செயலாளர் ஜெரோம் பொருளாளர் செல்வராசு. து.தலைவர் ஏசுதாஸ் து. செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் ஏற்படு செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அதே போல மீன்சுருட்டி அண்ணா நகரில் கிளை தலைவர் இந்திரா கிளை செயலாளர் M.கலியமூர்த்தி பொருளாளர் K. செல்வி துணை தலைவர் P.சரோஜா துணை செயலாளர் பாண்டியன் என நிர்வாகிகள் கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்படு கொடியேற்ற நிகழ்ச்சி செப்டம்பர் 21ல் காலை முதல் மாலைவரை நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் S.துரைராஜ் மாவட்ட செயலாளர் இர.மணிவேல், வி தொ ச மாவட்ட செயலாளர் A.கந்தசாமி ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் R. இளவரசன், மாவட்ட நிர்வாகி T. தியாகராஜன். தீண்டமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பத்மாவதி CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.பரமசிவம் சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் மைதின் ஷா தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் N. அருணாசலம் என கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் வலியுறுத்தி பேசினார்கள்.

Similar News