பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மீன்சுருட்டி அருகே பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை கலெக்டர், எம்எல்ஏ, ஆர்டிஓ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.அவர்களுக்கு நரிக்குறவ இன மக்கள் பாசி மணி வழங்கி கௌரவித்தனர்.;
அரியலூர், அக்.6- பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காவெட்டேரி பகுதியில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. நரிக்குறவர் பழங்குடியினருக்கு நவீன முறையில் வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, மற்றும் கழிப்பறை,இரும்பு நிலையுடன் கூடிய மரப்பலகை கதவு மற்றும் மின்விசிறிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட் கட்டமைப்பு வசதிகள் கூடிய 12 வீடுகள் கட்டப்பட்டன, இதனை நேற்று திங்கள்கிழமை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து துவக்கி வைத்தார், இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க கண்ணன் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். இதில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் தாட்கோ திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.