கழக உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் பூர்த்தி செய்தும், வாக்காளர்களின் விரவங்கள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தையும் 100 சதவீதம் நிறைவு செய்து,

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-08-21 15:36 GMT
நீலகிரி மாவட்டம், மேலூர் ஒன்றியத்தில் தலைமை கழகத்தால் வழங்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு - கழக உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் பூர்த்தி செய்தும், வாக்காளர்களின் விரவங்கள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தையும் 100 சதவீதம் நிறைவு செய்து, கீழ்கோத்தகிரி ஒன்றியத்தை தொடர்ந்து, இரண்டாவதாக மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் அவர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில் வழங்கினார். உடன் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், உதகை வடக்கு (மேற்கு) ஒன்றிய செயலாளர் தொரை, கழக நிர்வாகிகள் எல்கில் ரவி, அணில்குமார், கஜேந்திரன், பாலசுப்ரமணியம், அன்பழகன், மோகன் ஆகியோர் உள்ளனர்.

Similar News